search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பு கட்டுதல்"

    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறும்.
    • கோவிலில் தினசரி காலை மற்றும் மதியநேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 11 காளி பூஜை நடக்கிறது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் காலையிலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கிவிட்டனர். இன்று மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறும்.

    கொடிஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று தசரா திருவிழா தொடங்குகிறது.

    திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளிஅருள் வழங்குகிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

    கோவிலில் தினசரி காலை மற்றும் மதியநேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.

    திருவிழா தொடங்கியதையொட்டி விரதம் இருந்துவந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கயிற்றைவலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடமணிந்து, வீடுவீடாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருவார்கள்.

    24 -ந் தேதி 10-ம் திருநாள் அன்று தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை பக்தர்கள் கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள், 24 -ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி மற்றும் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள், அங்கு மகிஷாசுரசம்காரம் முடிந்த பின்னர் அம்மன் கடற்கரை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில், முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பின்பு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் பவனி சென்று மாலையில் கோவிலுக்கு வந்ததும், முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்த்து பின்பு பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். நள்ளிர்ரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    மறுநாள் 12-ம் திருநாள் அன்று பகல் 12 மணிக்கு பால் அபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.

    • திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது.
    • யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் காட்டுநாயக்கன் பழங்குடியினர் தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயில் 9-ம் ஆண்டு திருவிழா வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளதால் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது.

    முன்னதாக ஆலயம் முன்பு சிவாச்சாரியார் மந்திரங்களுடன் யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மகாதீபா ர்த்தனை காண்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • இக்கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கேடக திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன், ஆட்சாளம்மன், தக்களி பெத்தான் உள்ளிட்ட சாமிகள் வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூரில் ஆட்சாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கேடக திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் நாள் விழாவாக நேற்று முதல்நாள் இரவு விழிதியூர், அருள்மொழிதேவன் கோவில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன் ஆலத்தூர் ஆட்சாளம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு மாவிளக்கு பூஜை, கஞ்சி வார்த்தல், அன்னதானம், பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதியுலா இன்று நடைபெறுகிறது. இதில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன், ஆட்சாளம்மன், தக்களி பெத்தான் உள்ளிட்ட சாமிகள் வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை விழுதியூர், அருள்மொழி தேவன் சாமிகள் சொந்த ஊருக்கு செல்லுதல், மஞ்சள் விரட்டி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    • மொட்டையரசு திருவிழாவில் தங்க குதிரை வாகனத்தில் தெய்வானையுடன், முருகப்பெருமான் எழுந்தருளினார்.
    • காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 3-ந் தேதி வசந்த உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் இரவு முருகப்பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மீண்டும் உற்சவர் சன்னதிக்கு வந்தடைவார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், காவடி, பறவைக்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து திருப்பரங்குன்றம் சண்முகர், வள்ளி, தெய்வா னைக்கு பாலா பிஷேகம் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக மொட்டை யரசு திருவிழா இன்று நடந்தது. காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சிறப்பு அலங்காரத்தில் முருகன்,தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோவிலில் இருந்து புறப்பட்டு முருகப்பெருமான் பல்வேறு மண்டபங்களில் திருக்கண் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மொட்டையரசு திடலில் எழுந்தருளிய முருகப்பெருமான் அங்கு ஒவ்வொரு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மாலை வரை மொட்டை அரசு திடலில் இருக்கும் முருகப்பெருமான் இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வந்தடைவார். வழியெங்கும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணை யர் சுரேஷ் மற்றும் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    ×